welcome

அஸ்ஸலாமுஅலைக்கும்!எங்களின் புதூர் முரசுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம்!

Tuesday, September 21, 2010

0 அன்புள்ள அண்ணனுக்கு!


அன்புள்ள அண்ணனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!
தங்களை தவிர மற்றவர்கள் முஸ்லிம்கள் இல்லை! தங்கள் மர்கஸ் இல்லாத இடங்களில் மட்டும் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் தொழுவது கூடும்! மற்ற பள்ளிவாசல்களில் தொழுவது கூடாது! மற்ற முஸ்லிம்களை பின் பற்றி தொழுவது கூடாது ! தங்களை தவிர மற்ற கொள்கைவாதிகள் அனைவரும் வழிகேடர்கள்!பள்ளிவாசல்களில் ஜமாஅத்களில் ஏற்படுத்திய குழப்பங்கள்,சண்டைகள்,எஸ்.பி.பட்டினம் பள்ளியை தொழுகை நடை பெறாமல் பூட்ட வைத்த அநியாயம் ,மேலும் பல பள்ளிவாசல் அபகரிப்புகள், என அனைத்தையும் மறந்து இட ஒதுக்கீட்டை பெற கருத்து வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்களே வாருங்கள்! உங்களை காட்டி நாங்கள் அரசியல் ஆதாயம் பெற மாட்டோம் என நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, நம்பி வந்த மக்களை ,கழுத்தறுக்கும் நயவஞ்சகனை போல் ,அந்த சுன்னத் ஜமாஅத் மக்கள் சுட்டுக் கொல்லப்பட காரணமான நீங்கள் , அதற்காக வருத்தம் கூட தெரிவிக்காமல், அதை மறைத்து ,மறுத்து தற்காப்புக்காக கொல்வதில் தவறில்லை என உங்கள் தொலை கட்சியில் வாதிட்டீர்கள்.ஆனால் உண்மையை உலகிற்கு எடுத்து சொன்ன தமிழகத்தின் முன்னணி ஊடகங்களை உங்களின் அறியாதொண்டர்களை விட்டு மிரட்டியதோடு ,நாங்கள் பல லட்சம் மக்களை கூட்டும் இயக்கம் என இட ஒதுக்கீடிற்காக வந்த மக்களை உங்களின் கூட்டமாக காட்டி ஆதாயம் தேட பார்க்கின்றீர்கள்! அது மட்டுமின்றி மூன்றாம் தர ரவுடிகள் குற்றத்தை செய்து விட்டு அரசியல் வாதிகளின் நெருக்கத்தை காட்டி தப்பிப்பது போல் , பிரதமரே அழைத்து [?] பேசும் இயக்கத்தை பற்றி அவதூறு வெளியிட்டால்
விளைவு என்னாகும் தெரியுமா? என கேவலமாக பிரதமரை இழுக்கின்றீர்களே ! சுன்னத் ஜமாஅதினரை சுட்டு கொல்வதற்க்கா ஜே.எம்.ஹாருன் உங்களை பிரதமரை சந்திக்க வைத்தார். இது போன்ற கேவலமான, மக்களை காட்டி நீங்கள் நடத்தும் மலிவான அரசியலை இனியேனும் நிறுத்தி கொள்ளுங்கள். இல்லையெனில் மறுமையில் அந்த மக்கள் கூட்டத்தின் முன் கேவல படுத்தப்படுவீர்கள். -இப்படிக்கு செங்கிஸ் கான்.
Read More...


நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் சகோதரர் பாக்கர் மற்றும் செங்கிஸ் கான் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை.
Read More...

0 முன் மாதிரி முஸ்லிம் கிராமம்







முதியோர் உதவித் தொகை வழங்கும் முன் மாதிரி ஜமாஅத் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் ரிப்போர்ட்டில் வெளிவந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார் கள். தற்போது அதே இளையான்குடி புதூரில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிந்து அது பற்றி விசாரித்தோம்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே உள்ள புதூர் சுமார் 800 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட சிறிய ஊர். நகரமும் கிராமமுமற்ற நடுத்தரமான அழகிய ஊரான புதூரைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள பெரும்பாலான மேன்சன்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை. சென்னையில் வாழ்ந்தாலும் சொந்த ஊரின் மேல் அக்கறை கொண்ட இவ்வூர் இளைஞர்கள், புதூர் முஸ்லிம் நற்பணி மன்றம், அழகிய கடன் உதவி அறக்கட்டளை அல்ஹுதா மதரஸô போன்ற அமைப்புகளை நிறுவி, பல்வேறு மார்க்கப்பணி மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்து வருவதோடு பிறந்த ஊரான புதூர் முன்னேற்றத்திலும் அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றனர்.



பைனான்ஸ் மற்றும் சீட்டு எனும் பெயரில் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் புதூரில் உள்ள ஏழை எளியவர்கள் சிக்கி அதனால் பல்வேறு இன்னல்களுக்கும், ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகி வருவதாகவும், இதனால் பல தீமைகளுக்கும் இந்த வட்டி எனும் அரக்கன் வழிவகுப்பதாகவும் அறிந்து, மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் ""புதூர் மக்கள் உதவிக் குழு'' எனும் பெயரில் குழு அமைத்து விசாரித்ததில், பதினைந்துக்கும் மேற்பட்ட பிற மதத்தைச் சேர்ந்த சீட்டுக் கம்பெனிக்காரர்கள் தினமும் ஊருக்குள் சுமார் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளில் வட்டிக்குப் பணம் கொடுத்து லேவாதேவியில் ஈடுபட்டு வசூலுக்கு வருவதாக அறிந்து, அவர்களை அழைத்து விசாரித்ததில் சுமார் எட்டு லட்சம் வரை கடன் கொடுத்திருப்பதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு ஊரில் அறிவிப்புச் செய்து கடன் வாங்கிய அனைவரையும் தங்களது கணக்கு நோட்டுக்களை எடுத்து வரச் சொல்லி ஆய்வு செய்ததில் சுமார் 6,50,000 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது தெரிய வந்தது.
ஃபைனான்ஸ்காரர்களை ஓரிடத்திற்கு வரவழைத்து மக்களை கசக்கிப் பிழியும் வட்டியின் தீமையையும், வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளையும் எடுத்துச் சொல்லி வட்டியை அடிப்படையாகக் கொண்ட நிதி நிறுவனங்கள் எல்லாம் திவாலாகி வருவதையும், அதனால் ஏற்பட்ட கடும் விளைவுகளையும் சுட்டிக் காட்டினார் குழுவில் அங்கம் வகிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான்.
அசல் மற்றும் வட்டி போக, அதன் பின் உங்களது பாக்கித் தொகையில் 30% மட்டுமே திரும்பத் தர முடியும். அதையும் வரும் மே மாதம் 15ந் தேதி அன்று வந்து நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை மக்களிடம் வசூல் செய்ய ஊருக்குள் வரக் கூடாது. யாருக்கும் வட்டிக்கும் கொடுக்கக் கூடாது.
அப்படி கொடுப்பதாகவோ, வசூலிப்பதாக தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ஒப்பந்தம் எழுதி இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.
மேலும் வட்டிக்குப் பணம் வாங்கிய மக்களை அழைத்து, அவர்களுக்கு மத்தியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான், ""இஸ்லாத்தின் பார்வையில் கடன்'' எனும் தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தி, கடனைப் பற்றியும் அதனால் ஏற்படும் சூழ்நிலைகள், விளைவுகளைப் பற்றியும் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் எடுத்துரைத்தார்.
""இருப்பினும் அவசரத் தேவைக்கு அவர்கள்தானே உதவுகிறார்கள். ஏழைகளாகிய எங்களுக்கு மாற்று வழி என்ன?'' என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். இதற்குத் தீர்வாக, உடனடியாக ஒரு குழு ஏற்படுத்தி தற்காலிக நிதியாக ரூ. 60,000ஐ ஏற்பாடு செய்து, முப்பது சதவீதத் தொகையை முதலில் செலுத்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்து, சென்னை சென்றதும் புதூர் மக்களிடம் எடுத்துச் சொல்லி ஒரு நிரந்தர நிதியமைப்பையும் ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும் ஊரின் நுழைவாயிலில் வட்டி தடை செய்யப்பட்ட ஊர் என்ற போர்டையும் நிறுவ முடிவு செய்து உடனடியாக நிறுவப்பட்டது.
புதூரைப் பின்பற்றி மற்ற முஸ்லிம் ஜமாஅத்துகளும் அல்லாஹ்வினால் ஹராமாக்கப்பட்ட வட்டியைத் தடை செய்ய முன் வந்து, ஜகாத்தை சரியான முறையில் வசூலித்து கந்து வட்டிக்காரர்களிடமிருந்து கடன்பட்ட மக்களை காக்க வேண்டும். செய்வார்களா?
- மங்கோலிய
Read More...

Monday, September 20, 2010

0 பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - சட்டம் கண்களைத் திறக்குமா?

ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்

உலக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச்சின்னம் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹபாத் உயர் நீதிமன்றம் சாவகாசமாக வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு எழுத இருக்கிறது.

400 ஆண்டு காலமாக, உரிய ஆவணங்களுடன் நிலை பெற்றிருந்த ஒரு சொத்து யாருக்குச் சொந்தம்? என்ற கேள்வியே அபத்தமானது. இதனை உணர்ந்ததால் தானோ என்னமோ, சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த பாபரி மஸ்ஜிதைத் திட்டமிட்டு தகர்த்து விட்டு, பிரச்சினையை நீதிமன்றம் தீர்க்கும் என வழக்கு தொடுக்க வைத்து விட்டனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, சிவில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு, ஆச்சரியமான முறையில் சம்பந்தப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலைகொண்டிருந்த நிலத்தின் கீழே கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை தரக்கோரி தொல்பொருள் ஆய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

உலகில் எந்த ஒரு இடத்திலும் இன்று நிலைகொண்டிருக்கும் ஒரு கட்டடத்தின் கீழே வேறு ஏதாவது கட்டடமோ குடியிருப்போ இருந்ததா என்றொரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் எப்போதோ இருந்த ஏதோ ஒரு கட்டடமோ குடியிருப்போ நாகரீகச் சின்னங்களோ இருந்ததற்கான தடயங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு, இன்று சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த நிலம் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்க முடியுமா? அப்படி வழங்கினால், வெள்ளை மாளிகையிலிருந்து நமது இந்திய நாடாளுமன்ற கட்டடம் வரை பெரும்பாலான இடங்கள் அரசுகளின் கைகளை விட்டுச் செல்ல வேண்டிய அபத்தமான சூழல் உருவாகும். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் அடிக்கடி நிலத்தடியில் கிடைக்கும் சோழர்காலச் சிலைகளையும் நாணயங்களையும் அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் முடிவு செய்தால் எப்போதோ இறந்துபோன சோழர்குலக் குடிமக்களை தேடிப்பிடிக்க வேண்டிய கேலிக்கூத்து உத்தரவையும் நீதிமன்றம் வெளியிடவேண்டிவரும்.

பாபரி மஸ்ஜித் நிலத்தின் கீழே கோயில் இருந்ததா? என்ற தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் ஆய்வு முடிவுகளில், 400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு ஆலயம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அந்நிலத்தில் மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் சில தடய விவரங்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜயபாரதம்(10.09.2010) இதழ் மட்டும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இக்கட்டுரையை வாசிக்கும் எவருக்கும் கோயிலின் மீது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. கார்பன் 12, 14 ஆகிய விஞ்ஞான முறைகளில் ஒரு இடத்தை ஆய்வு செய்து, அதில் முன்னர் வாழ்ந்தவர்களின் தடயத்தைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அந்நிலத்தின் உடமையாளரைத் தீர்மானிக்க ஆரம்பித்தால் என்ன நிலமை ஏற்படும் என்பதைத் தனியாக விளக்க வேண்டியத் தேவையேதும் இல்லை. அத்துடன், 400 ஆண்டுகளுக்கும் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய நிலை என்ன என்பதை வெறும் தொல்லியல் ஆய்வு கொண்டு 100 சதம் சரியான முடிவுக்கு வருவதும் சாத்தியமற்ற ஒன்று என்பதை அறிவுடையோர் அனைவரும் புரிந்து கொள்வர்.

தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் நில உரிமைக்கான தீர்ப்பு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா? இதுவும் விவாதத்துக்குரிய ஒரு விஷயமே.



பாப்ரி மஸ்ஜித்:சங்க்பரிவாருக்கு நிலத்தின் மீது உரிமையில்லை-நீதிபதி சச்சார்
டெல்லி,செப்.19:கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார்.

"அது ஒருவேளை நம்பிக்கையின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏமாற்று வித்தையாகவோ இருக்கலாம்.

என்னவாயினும், மஸ்ஜிதின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை கைப்பற்ற அதுவெல்லாம் சட்டரீதியாக இயலாது. மஸ்ஜித் கோயில் சிதிலங்களின் மீதுதான் கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்பட்டு அங்கு மஸ்ஜித் நிர்மாணிப்பது உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.

அல்லது பாப்ரி மஸ்ஜித் இருந்த நிலத்தில் கோயில் இருந்தது என்ற தீர்ப்பு வரலாம். ஆனாலும் கூட வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்ஸின் உரிமைக்கோரல் எடுபடாது.

1992-ஆம் ஆண்டில் வி.ஹெச்.பி-ஆர்.எஸ்.எஸ் அக்கிரமக்காரர்கள் தகர்க்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 வருடங்களாக அங்கு நிலைப் பெற்றிருந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் நிர்மாணிக்க கோயிலை இடித்திருந்தால்கூட சட்டரீதியாக சங்க்பரிவாருக்கு அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையுமில்லை." இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.

நன்றி: பாலைவனத்தூது / மாத்யமம்

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலத்தை உரிய ஆவணங்களுடன் ஒருவர் சொந்தமாகக் கொண்டு அனுபவித்திருந்தால், அது தற்போதைய உரிமையாளருக்கே சொந்தம் என்பதை நீதிபதி சச்சார் அவர்கள் உரியத் தீர்ப்பு ஆதாரத்துடன் விளக்குவதோடு, பாபரி நிலத்தின் உரிமை எவ்வகையில் பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பாபரி நில வழக்கில் எதிர்தரப்பான வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உட்பட உள்ள சங்கபரிவாரத்தினருக்கு அதனைச் சொந்தம் கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைப்பதைப் பெட்டிச் செய்தியில் காண்க.

வருகின்ற 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்ற பாபரி நிலத் தீர்ப்பு விஷயத்தில், என்ன தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசுகள் மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கியக் குற்றவாளியான பாஜக தலைவர் அத்வானியும், "தீர்ப்பு எப்படி அமைந்தாலும் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்வது உறுதி" என திருவாய் மலர்ந்துள்ளார். இதைவிட ஒருபடி மேலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர், "தீர்ப்பு எப்படியானாலும் முஸ்லிம்கள் மனமுவந்து நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும். இல்லையேல் அவர்கள் தேசதுரோகிகள் என்றே எண்ணப்படுவர்" என்று பாபரி நில விஷயத்தைத் தேசதுரோகத்துடன் விஷமத்துடன் தொடர்புபடுத்தி விஷயத்தைக் கக்கியுள்ளார்.

அநியாயமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டட விஷயத்தில் தங்கள் தவறை ஒத்துக்கொண்டு, தவறைத் திருத்த முன்வராததோடு அந்த நிலத்தையே தங்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும்; இல்லையேல் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாவர் என்று கூறுவது, இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்தால் எங்களின் தயையில் நாங்கள் கூறுவதையும் செய்வதையும் விருப்பமில்லையேனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக இருந்தாலும் முழு மனதுடன் ஏற்று, அங்கீகரித்தே வாழ வேண்டும், இல்லையேல் தேசத்துரோகிகள் என்ற முத்திரையுடன் முழுமையாக அழித்தொழிக்கத் தயங்கமாட்டோம் என்றே ஆர்.எஸ்.எஸ் தலைவர் அகங்காரத்துடன் இந்திய முஸ்லிம்களை மிரட்டுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.

இந்நிலையில், இதுநாள் வரை இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கும் என்றும் நம்பிக்கையுடன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு, வர இருக்கின்ற தீர்ப்பு மட்டுமே உரிய நியாயத்தை வழங்கும். இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஃபாஸிஸம் தன் வேரைப் பாய்ச்சி வளர்ந்து விட்டச் சூழலில், நீதித்துறையும் தன்னுடைய கண்களைக் கட்டிக்கொண்டால், அது உலக அரங்கில் இந்தியாவை ஒருபோதும் தலைநிமிர வைக்காமல் செய்து விடும்.

நீதி நின்று கொல்லும்?
சத்திய மார்க்கம் .காம்
Read More...
Read More...
Read More...

0 மரணச் செய்தி!

கோஸ் மகளும், சேவர் முஹம்மத் மீரா
மனைவியுமான நைனம்மா இன்று
புதூரில் வபாத் ஆனார்.இன்னா லில்லாஹி
வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.
Read More...

Thursday, September 16, 2010

பெருநாள் தொழுகை -திருச்சியில் திடலில்


அஸ்ஸலாமு அலைக்கும்!


கடந்த 10 -09 -2010 அன்று இந்திய தௌஹீது ஜமாத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெருநாள் தொழுகை
நபி வழியில் திடலில்
நடைபெற்றது .இதில் திருச்சியில்முதல் முறையாக
உழவர் சந்தை திடலில் மாநில செயலாளர் சகோ :செங்கிஸ் கான் தலைமையில் நடைபெற்றது.
இந்த பெருநாள் தொழுகையில் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டது சமுதாய ஒற்றுமையை உலகிற்கு எடுத்து காட்டியது.
இந்த பெருநாளின் உரையில் ரமலானின் வரலாற்று வெற்றிகளையும் ,அதனை தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 26 -12 -2010 இல் இன்ஷா அல்லாஹ்
திருச்சியில் நடை பெறவிருக்கும் வக்பு நிலமீட்பு போராட்ட மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ளும் படி அழைப்பு விடுத்தார்.

அபூ நபீலா




Read More...


பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி
கோடி கோடியாய் சேர்த்து அரசாங்கங்களுக்கே
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக உருவெடுத்து
அரசியல் வர்க்கம், அதிகாரவர்க்கம் என
தன கையில் வைத்து கொண்டு அப்பாவி பக்தர்களிடம்
ஆபாச விளையாட்டுகள் நடத்தும் அயோக்யனின்
உண்மை முகத்தை உலகிற்கு உணர்த்திய
பி.பி.சி.ஆவனாப்படம். பார்க்க கிளிக் செய்யவும்.
Read More...

Saturday, September 4, 2010

0 இதஜ இஃப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் காதர் முஹைதீன்!

இதஜ இஃப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் காதர் முஹைதீன்!

இறையருளால் நம் தலைமையகத்தில் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அவ்வரிசையில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா அவர்கள் கலந்து கொண்டர்கள்.

அவ்வாறே சென்ற 27.08.2010 அன்று தமுமுகவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.

அவரைத் தொடர்ந்து முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்கள் நம் அழைப்பை ஏற்று தலைமையத்திற்கு வருகை தந்தார். அவர்களை நம் மாநிலத் தலைவர் பாக்கர், துணைத் தலைவர் முனீர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட காதர் முஹைதீன் அவர்கள் தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்

Read More...