welcome

அஸ்ஸலாமுஅலைக்கும்!எங்களின் புதூர் முரசுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம்!

Tuesday, October 26, 2010

0 இந்தியா டுடே பேட்டியும் அண்ணனின் பல்டியும்!



சமிபத்தில் வெளியான இந்தியா டுடே பேட்டியில் பி.ஜே.வின் முரண்பாடுகள்: .

பல்டி ஒன்று - திருவிடசெரி கொலை விசயத்தில் சம்மந்தப்பட்ட குத்புதீன் ' எந்த விதத்திலும் ஜமாத்தோடு தொடர்புடையவர் இல்லை' என்ற நிலை மாறி'அமைப்பின் அனுதாபி' என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளார்.

பல்டி இரண்டு; அரசியல்வாதிகள் சந்திப்பு தேவை இல்லை! உத்தரவு போட்டால் உயிரை கொடுத்து [!?] ஒட்டுகேட்போம்!என்று புதுபேட்டையில் பேசிய பி.ஜே. இன்று மார்கத்தை முன்னிறுத்தும் நீங்கள் அரசியல் தலைவர்களை சந்திக்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு 'அவர்களிடத்தில் தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பல்டி மூன்று : பாபர் மஸ்ஜித் தீர்ப்பை முஸ்லிம்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு 'தங்கள் எதிர்ப்பை காட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'! என்று தன் முந்தைய நிலைப்பாட்டை முஸ்லிம்களின் நிலைப்பாடாக கூறி பிந்தைய தன் போராட்ட நிலைப்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளார் [இது செயற்குழுவுக்கு முந்திய பேட்டி என்றாலும் பல்டி பல்டிதான்]

பல்டி நான்கு: இது வரை அல்லாஹ்வை நம்பிய அண்ணன் 'மதரசாக்களில் ஆங்கிலமும் அறிவியலும் புறக்கணிக்கப்பட்டது துரதிஷ்டம் ஆன முடிவு' ' என்று சொல்லி ' அதிஷ்டத்தை' நம்பத் துவங்கியுள்ளார்.
Read More...

Saturday, October 23, 2010

0 நரகத்திலிருந்து மீட்பது அல்லாஹ்வா? அண்ணனா?

''நாளை நமக்கும் இக்கதிதான் ஏற்படும் என்பதை உணராத சிலர், தனிநபருக்காக ஒரு ஜமாஅத் போராட்டத்தில் ஈடுபடுவதா? என கூக்குரலிடுகின்றனர். நரகத்தின் விளிம்பிலிருந்த தமிழக முஸ்லிம்களை பாதுகாக்க போராடியதில், இந்த தனிநபருக்கு பெரும்பங்குண்டு.'' என்ற வாதத்தை வைத்து, நக்கீரனுக்கு எதிராக நடத்தப்படட் 'தக்லீது' போராட்டத்தை நியாயப்படுத்துகிறது அண்ணன் ஜமாஅத்.

இந்த வாதம் சரியா? என்று பார்ப்பதற்கு முன்னால், ஒரு வாதத்திற்கு இவர்தான் தமிழக முஸ்லிம்களின் 'நரக மீட்பர்' என்றே வைத்துக் கொண்டாலும், இவரை யாரும் விமர்சிக்கவே கூடாது என்ற சட்டம் எதுவும் உள்ளதா?

நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட முடியும் என்ற சட்டம் இருந்தும், பாபர் மஸ்ஜித் விஷயத்தில் நீதிமன்றத்தின் அநியாயதீர்ப்பை அண்ணன் உட்பட, முஸ்லிம்கள் அனைவரும் எதிர்க்கும்போது, இவரை பற்றி மட்டும் விமர்சித்தால், போராட்டம்-முற்றுகை என்றால் இவர் என்ன குறைகளுக்கு அப்பாற்பட்ட மலக்கா?

அடுத்து அவர்களின் வாதத்திற்கு வருவோம். நரகத்தின் விளிம்பிலிருந்த தமிழக முஸ்லிம்களை மீட்டதில் இவருக்கு பெரும் பங்குண்டாம். தமிழக முஸ்லிம்கள் நரகத்தின் விளிம்பில்தான் நின்றார்கள் என்று இவர் எப்படி அறிந்து கொண்டார்? இவருக்கு என்ன வஹியா வருகிறது?

முஸ்லிம்கள் இணைவைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் நரகத்தின் விளிம்பில் நின்றார்கள் என்று கூறினோம் என்று கூற வருவீர்களானால், எல்லா தமிழக முஸ்லிம்களுமா இணைவைத்துக் கொண்டிருந்தார்கள்?

மேலும் ஒரு போராட்டத்தில் தனக்கு பெரும் பங்குண்டு என ஒருவர் எப்போது கூறிக்கொள்ளலாம் என்றால், அந்த போராட்டத்தில் ஓர் முடிவு எட்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று வெற்றி அல்லது தோல்வி. அதாவது அண்ணன் உரிமை கொண்டாடும் போராட்டமான 'நரகத்திலிருந்து மீட்பு' என்பதை பொருத்தவரை நரகத்திலிருந்து உறுதியாக தமிழக முஸ்லிம்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழக முஸ்லிம்களில் இத்தனை லட்சம் பேரை, அல்லது இத்தனை ஆயிரம் பேரை, அல்லது இத்தனை நூறு பேரை, அல்லது ஒரு பத்து பேரை, அல்லது ஒரே ஒருவரையாவது நான் நரகத்திலிருந்து மீட்டிவிட்டேன் என்று அண்ணனால் உறுதியாக கூறமுடியுமா? அட அவ்வளவு வேண்டாம். 'நரக மீட்பர்' என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அண்ணன், நான் நரகம் செல்லமாட்டேன் என்று தன்னளவில் உத்திரவாதம் தரமுடியுமா?

சரி. தனது நரகமீட்பில் தோல்வி என்றும் உறுதியாக கூறமுடியுமா? என்றால் அதுவும் முடியாது. எனவே தமிழக முஸ்லிம்களில் எவர் நரகம் செல்வர்- எவர் சொர்க்கம் செல்வர் என இறைவனின் பதிவேட்டில் உள்ளதுதான் நடக்கும். இதில் அண்ணன் பில்டப் செய்வதாக இருந்தால், குறைந்தது தன்னளவில் உத்திரவாதம் தரட்டும்.

இன்னும் சொல்லப்போனால், கேமராவின் வெளிச்சத்திலும், இரவை பகலாக்கும் வெளிச்சத்திலும், அலங்கரிக்கப்பட்ட மேடையில் முழங்கும் இவரைப்போல், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அழைப்பு பணி செய்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களோ,தங்களின் உயிர் பொருள் அனைத்தையும் தனது மார்க்கம் வளர்த்த சஹாபாக்களோ, ஒரு ஹதீஸை பெற பலநூறு கிலோ மீட்டர் பயணித்த இமாம்களோ, இறை பொருத்தத்தை மட்டுமே நாடி அழைப்பு பணியாற்றும் இன்றைய நல்ல அறிஞர்கள் எவருமே தங்களை 'நரக மீட்பர்' என்று பெருமையடித்துக் கொள்ளவில்லை. இதிலும் அண்ணன் தனித்து விளங்குகிறார்.

இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - இது அல்லாஹ்வின் கூற்று.

'நரகத்தின் விளிம்பில் இருந்த தமிழக முஸ்லிம்களை மீட்க போராடினேன்- இது அண்ணன் கூற்று.

இதில் எதை பின்பற்றவேண்டும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டுகிறோம்.

--
10/18/2010 09:42:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
Read More...

Tuesday, October 5, 2010

0 எங்கும் ஆபாசம் - எதிலும் ஆபாசம்

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி. இன்றைய கவிஞன் பாட்டெழுதினால் எங்கெங்கு காணினும் ஆபாசமடா என்று கூறுமளவுக்கு எங்கும் ஆபாசம் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆபாசத்தை அரங்கேற்றியது பல துறைகளாக இருந்தபோதிலும், தாராளமயமாக்கிய பெருமை சினிமாவுக்குத்தான் சேருகிறது. நாட்டுப் புற பெண்ணின் பாத்திரமாக இருந்தாலும் கனவில் பாடுவதாக காட்டி அரைகுறை ஆடையில் ஆட வைத்து விடுகிறார்கள்.
முந்தைய காலங்களில் திரைப்படத்தின் ஒரே ஒரு பாடலுக்கு வரும் நடிகைகள் தான் ஆடைக் குறைப்பில் ஈடுபடுவார்கள். இப்போதோ கதாநாயகிகளுக்கு கூட உடைப் பஞ்சம் ஏற்பட்டு விடுகிறது.

திரைப்படத்தில் வரும் காட்சிகளை கவனமாகப் பார்த்து, ஆபாசக் காட்சிகளை நீக்க வேண்டிய சென்சார் அதிகாரிகள் சிறிய அளவு கெடுபிடி செய்தாலும் முக்கால்வாசி படமும் வெட்டுப்பட வேண்டிய சூழ்நிலை.

இதனால் தான் ஒரு கவிஞன் பாடினான்...
அந்தக் காலத்து நடிகைகள் நடித்துக் காட்டினார்கள், இந்தக் காலத்து நடிகைகள் காட்டி நடிக்கிறார்கள் என்றான்.

பெரிய திரையின் கதை இதுவென்றால், சின்னத் திரையோ உருவத்தில் சிறுத்தாலும் ஆபாசப் போட்டியில் பெரிய திரையை பின்னுக்கு தள்ளி விடுகிறது.ஆரம்பத்தில் தூர்தர்ஷனாக இருந்த காலகட்டத்தில் பெரிய திரையின் ஆதிக்கம் வெள்ளிக்கிழமையில் ஒளியும் - ஒலியும் நிகழ்ச்சியிலும், ஞாயிற்றுக் கிழமை திரைப்படத்திலும் மட்டுமே இருந்தது. கேபிள் டிவியின் வருகையும், தனியார் சேனல்களின் படையெடுப்பினாலும் முழு நேரமும் திரைப்படங்களின் ஆதிக்கமாகவே மாறிவிட்டது சின்னத்திரை.

வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன தொலைக்காட்சிகள். அறிவுப்பூர்வமாக செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உட்கார்ந்தாலும், இடையில் விளம்பரம் என்ற போர்வையில் அரைகுறை ஆடைகளை அணிந்த பெண்களை கண்ணில் காட்டத் தவறுவதில்லை.
சேலை விளம்பரத்திலும், பெண்களின் ஆடைகள் குறித்த விளம்பரத்திலும் மட்டும் கவர்ச்சி ஆடை பெண்கள் வந்த நிலை போய், மோட்டார் பைக் விளம்பரங்களிலும், ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும், ஷேவிங் கிரீம் விளம்பரங்களிலும் கவர்ச்சி உடை பெண்கள் அணிவகுத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா அறிமுகப்படுத்தியுள்ள குத்தாட்டம் சினிமாவை மட்டு மல்லாமல், பல துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரத்தை நீட்ட ஆரம்பித்துள்ளது.
தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்று கடை பரப்பிய குத்தாட்டம், முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில் எல்லாம் கட்டாயமாக ஆட வேண்டிய தேசிய ஆட்டமாக மாறிவிட்டது.

அரசியல் கட்சி மேடைகளில் பெரிய தலைவர்கள் வரும் வரை கூட்டத்தை கலைய விடாமல் செய்ய நகைச்சுவை, மிமிக்ரி போன்றவை நடந்தது அந்தக் காலத்தில்.
இப்போதோ, பெரிய தலைவர்கள் வரும் வரை கூட்டத்தைக் கலைய விடாமல் வைத்திருப்பது ஆபாச அசைவு காட்டும் குத்தாட்டங்கள்தான். குத்தாட்டத்தின் மகிமை பள்ளி ஆசிரியைகளுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவ - மாணவிகள் குத்தாட்டம் ஆடுவதற்கு பயிற்சியளிக்கிறார்கள்.

இந்த ஆட்டம் இப்படியென்றால், இன்னொரு ஆட்டமான விளையாட்டிலும் ஆபாசம். ஆடைக் குறைப்பு புகுந்துவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்கும், மன வலிமையை உருவாக்குவதற்கும் விளையாடப்படுவது தான் விளையாட்டு. இதன் நோக்கமும் மாறிவிட்டது.

டென்னிஸ் விளையாட்டு வேகத்திற்கும், விவேகத்திற்கும் எப்படி பெயர் போனதோ, அதேபோல் குட்டைப் பாவாடைக்கும் பிரசித்தி பெற்றது.பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் குட்டைப் பாவாடையுடன் விளையாடுவதாலும், அதனை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய காரணத்தினாலும்தான் அந்த விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம் பேர் உருவானதாக நாட்டில் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆவேசத்துடன் பாய்ந்து மட்டையால் பந்தை அடிக்கும்போது அடிக்கும் காட்சியை காட்டும் தொலைக்காட்சி, பந்தை அடிக்கப் பாய்கிறபோது குட்டைப் பாவாடை பறந்து உள்ளாடை தெரிவதை ஸ்லோமோஷனில் காட்டத் தவறுவதில்லை.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைவிட பிரபலமான கிரிக்கெட்டிலும் இந்த ஆபாசம் அரங்கேற ஆரம்பித்து விட்டது. ஐபிஎல் போட்டியில் அறிமுகமான அசிங்கம் எல்லாப் போட்டிகளிலும் கடை பரப்பத் துவங்கி விட்டது.

பந்து எல்லைக் கோட்டை தாண்டும்போதும், வீரர்கள் ஆட்டமிழக்கும் போதும் முன் காலங்களில் ரீப்ளே போடுவார்கள். இப்போது அதனுடன் சேர்த்து "சியர் கேர்ள்ஸ்' என்னும் அரைகுறை ஆடைகள் அணிந்த பெண்களின் அசிங்க ஆட்டத்தையும் சேர்த்துக் காட்டுக்கிறார்கள்.

ஆபாசங்களை விளையாட்டில் அள்ளிக் குவிப்பதில் முதலிடம் எதற்கு என்றால் சந்தேகமில்லாமல் பீச் வாலிபாலுக்குத்தான். விளையாட்டு என்ற போர்வையில் டூ பீஸ் உடையில் இவர்கள் குதிக்கும் கன்றாவியைப் பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதாக பெருமை வேறு.

இந்த நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறுவதென்றால் பிரதான இடம் பிடிப்பது செல்போனும், இணைய தளமும் தான். இவைகளையும் இந்த ஆபாச அசிங்கங்கள் விட்டு வைக்கவில்லை.

எந்தத் துறைகளைப் பற்றிய தகவல்களையும், எந்த நாட்டைப் பற்றிய தகவல்களையும் இருந்த இடத்திலேயே பெற உதவுவது இணைய தளத்தின் சிறப்பு. அறிவியலின் அற்புதமாகவும், அறிவுச் சுரங்கமாகவும் விளங்க வேண் டிய இணைய தளத்தையும் ஆபாச ஆக்டோபஸ் விட்டு வைக்கவில்லை ஆபாசங்கள் இணைய தளங்கள் முழுவதும் வியாபித்து பரவியுள்ளன.

காட்சி ஆபாசங்கள் ஒருவகை என்றால், செல்போனில் நிகழ்த்தப் பெறும் ஆபாச உரையாடல்கள் இன்னொரு வகை. இந்த இரண்டு ஆபாசங்களிலும் சிந்தையைப் பறிகொடுத்து, பெரும் தொகையை இழந்தவர்க்ள பலர். ஆபாச நிறுவனங்களுக்கு டெலிபோன் நிறுவனங்கள் மூலம்தான் பணம் செல்கின்றது என்பதுதான் வேதனை. அரசு தொலைபேசி நிறுவனங்கள் மூலமாகவும் ஆபாச நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்படுகின்றது என்பது வேதனையிலும் வேதனை.ஆபாசமும், ஆடைக் குறைப்பும் தான் விபச்சாரத்தின் ஆணி வேர்கள், ஊற்றுக் கண்கள், பிரதான வாயில்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும். (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல்குர்ஆன் 7:26)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறது திருமறைக்குர்ஆன்.

ஆபாசமும், அசிங்கமும்தான் இன்றைய இளைய தலைமுறையை வழி கேட்டில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமுதாயத்தில் ஒழுக்கக் கேட்டை வளர்க்கின்றன. தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெறுமனே சினிமா போஸ்டர்களின் மீது தார் பூசுவதினால் மட்டும் ஆபாசம் ஒழியாது.

ஒரு அநீதியைக் கண்டால் அதனை கையால் தடுக்க வேண்டும், அதற்கு சக்தி பெறாவிட்டால் வாயால் தடுக்க வேண்டும், அதுவும் முடியாவிட்டால் மனதளவில் வெறுத்து ஒதுங்கி விட வேண்டும் என்கிற இஸ்லாமிய போத னையை கடைபிடிப்பதன் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும்.

ஒரு தீமையைத் தடுக்க வேண்டுமென்றால் அது நிகழ்வதற்கான அத்தனை வாசல்களையும் மூட வேண்டும். சமூகத்தின் மிகப் பெரிய தீமையான விபச்ôரத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அதன் பிரதான வாசலான ஆபாச ஆடைக் குறைப்பை உடனடியாக ஒழிக்க வேண்டும். அதுதான் விபச்சார ஒழிப்பிற்கான சம்மட்டி அடி என்பதை உணர வேண்டும்.
=============
Read More...